புதுடில்லி,-”ராணுவத் துறையில் நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை, ரஷ்யா – உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.நம் கடற்படை கமாண்டர்களின் நான்கு நாள் மாநாடு டில்லியில் நடந்தது. இதன் இறுதி நாளான
நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது :நம் நாடு சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, ராணுவத் துறையில் நாம் சுயசார்புடன் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உலக அளவில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர், நாம் சுயசார்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. இந்நேரத்தில், முப்படைகள் கூட்டாக இணைந்து செயல்படுவது, நம் எதிர்கால தேவைக்கு அவசியமாகும். இதற்கான முயற்சி துவங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி,-”ராணுவத் துறையில் நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை, ரஷ்யா – உக்ரைன் போர் நமக்கு உணர்த்துகிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.நம் கடற்படை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.