சென்னை: மது போதையில் ஆட்டோ ஓட்டுநரைக் குத்திக்கொலைசெய்துவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்ட நண்பர்கள்!

சென்னை மணலியை அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் (28). இவர் நேற்று இரவு மணலி புதுநகர்ப் பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அந்த சமயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே, ரவிச்சந்திரனின் நான்கு நண்பர்களும் அவரை கத்தியால் குத்தியிருக்கின்றனர். அதோடு, அருகிலிருந்த கல்லைத் தூக்கி அவரின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.

ரவிச்சந்திரன்

சம்பவமறிந்து வந்த மணலி புதுநகர் பகுதி காவல்துறையினர், ரவிச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக இறந்த ரவிச்சந்திரன் நண்பர்கள் தனுஷ், மதன்குமார், ஜெயபிரகாஷ் மற்றும் பரத் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரியவந்தது. மேலும், ரவிச்சந்திரனை கொலை செய்துவிட்டு அவர்கள் செல்ஃபி எடுத்ததும் தெரியவந்தது.

ரவிச்சந்திரன் நண்பர்கள்

காவல்துறையினர் கொலையாளிகளின் செல்போன்களைக் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் நண்பனைக் கொலை செய்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.