டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் 5 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நிர்வாக அதிகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே தொடர் மோதல்கள் இருந்து வருகிறது. இதில், ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு காவல் துறை நிலை, பொது அமைதி ஆகியவை தவிர மற்ற அனைத்து துறைகளும் டெல்லி அரசாங்கத்தை சேர்ந்தது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து, அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒன்றிய அரசு முக்கியமான சட்ட திருத்தங்களை மேற்கொண்டது.இந்நிலையில், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தாக்கல் செய்த ரிட் மனுவை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரித்து வந்தது. ஆனால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும்படி ஒன்றிய அரசு தனியாக இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்து வந்த தலைமை நீதிபதி அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஒருவேளை, அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டால், அனைத்து தரப்பும் வாதங்களையும் விரைவாக முடிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.