இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ஹங்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நான்காயிரத்து 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை. தனியார் பஸ்களும் இன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.