பேருந்துக்காக நின்றுந்த கல்லூரி மாணவர்களிடம் மது போதையில் அரிவாளை காட்டி மிரட்டிய 3 பேர் கொண்ட கும்பல் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுந்த கல்லூரி மாணவர்களிடம் மது போதையில் அரிவாளை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேருந்து நிலையம் அருகாமையில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு மது குடித்துவிட்டு வரும் நபர்கள் சிலர் பேருந்துக்காக காத்திருக்கம் மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் வேண்டுமென்றே வம்பிழுப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், அய்யனேரியை சேர்ந்த 19 வயது கார்த்தி என்பவன் மது போதையில் தகராறு செய்ததாகவும், அவனை அங்கிருந்த மாணவர்கள் தட்டிகேட்டபோது அங்கிருந்து சென்று மேலும் இருவரை அழைத்து வந்து அரிவாளை வீசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அரிவாளின் முனை பட்டதில் வைரமுத்து என்ற கல்லூரி மாணவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலிசார் தாக்குதலில் ஈடுபட்ட கார்த்தி என்ற ‘அட்டு’ கார்த்தி,  சின்னமணி மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.