போர் மூளும் அபாயம் விமானப்படை தளபதி எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி- ”எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது,” என அதன் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.

latest tamil news

டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:உலகில் இப்போதுள்ள நிலையைப் பார்க்கும் நம் முப்படைகளும் சிறிய மற்றும் நீண்ட கால போருக்கு தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் பதற்றம் போல், நீண்ட கால போருக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

latest tamil news

விமானப்படை, எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. அதை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், விமானப்படைக்கான ஆயுதங்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.