ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு.. 9 பேர் பலி.. 13 பேர் படுகாயம்.!

ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் மசூதிக்கு அருகில் உள்ள பள்ளியில் குண்டுவெடித்து, 33 ஷியா பக்தர்கள்  உயிரிழந்த நிலையில், இன்றும் குண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று வடக்கு பகுதியில் 2 இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் ஷியா பிரிவினர் வசிக்கும் பார்க மாகாண தலைநகர் மசார்-இ-ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தாலிபான்கள் படையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.