ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு: செல்வராகவன்

இயக்குநர்
செல்வராகவன்
தற்போது நடிகராகிவிட்டார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் செல்வராகவன்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் சாணிக் காயிதம் படம் மே மாதம் 6ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் சாணிக் காயிதம் படத்தில் நடித்தது பற்றி பேட்டி ஒன்றில் செல்வராகவன் கூறியதாவது,

ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏய், இப்போ நீ இயக்குநர் இல்லை என்று அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

படங்களில் நடிப்பது வித்தியாசமான அனுபவம். படத்தை இயக்குவது பற்றி யோசிக்க வேண்டியது இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்றாக இருக்கிறது.

இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். படத்தை இயக்குநரின் பார்வையில் பார்த்தேன். அது த்ரில்லாக இருந்தது என்றார்.

சாணிக் காயிதம் தவிர்த்து தம்பி தனுஷை வைத்து தான் இயக்கியிருக்கும் நானே வருவேன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் செல்வராகவன்.

அண்ணனும், தம்பியும் மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவன்,
தனுஷ்
வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பதால் நானே வருவேன் படம் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Nayanthara:நயன்தாராவுக்கு வியாதியா?: ரசிகர்கள் கவலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.