இந்தியாவில் மேலும் 3,377 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 3,377 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நேற்று(ஏப்.,28) மேலும் 3,377 பேருக்கு கோவிட் உறுதியானது. 2,496 பேர் குணமடைந்தனர். 60 பேர் உயிரிழந்தனர். தற்போது 17,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,30,622 ஆனது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,23,753 ஆனது.கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.74 சதவீதமாகவும், இறந்தவர்களின் விகிதம் 1.22 சதவீதமாகவும் உள்ளது.

நேற்று மட்டும் 22,80,743 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 188.65 கோடி டோஸ் ஆகவும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.