இன்று முதல் ரயில் , பஸ் சேவைகள் வழமைபோல் இடம்பெறும்

இன்று (29) வழமை போன்று புகையிரதங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய (28) தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக புகையிரத சேவை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்று திட்டமிட்டபடி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டடமைப்பின் அமைப்பாளர் எஸ். பி. விதானகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி உள்ளிட்டோரை இராஜினாமா செய்யுமாறு கோரி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டம் இன்று 21ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.