இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

திருச்சி மண்ணச்சநல்லூரில் இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

எதுமலையில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான அமிர்தம், அண்மையில் இறந்த தனது கணவர் ராமர் பெயரில் இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர்
சுரேஷை அணுகியுள்ளார்.

அப்போது அவர், சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து அது குறித்து அமிர்தம் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.

தொடர்ந்து இன்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், அமிர்தம் கொடுத்த லஞ்சத்தொகையை பெற்றுக்கொண்டபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.