இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க முடிவு?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில், புதிய பிரதமர் தலைமையில் அனைத்து கட்சிகள் அடங்கிய ஆட்சியை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் சிறிசேன கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருவரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பதவி விலக மாட்டேன் என மகிந்த ராஜபக்சே கூறியிருந்தார்.

latest tamil news

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின. இது தொடர்பாக முன்னாள் அதிபர் சிறிசேன கூறியதாக அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க அதிபர் ஒத்து கொண்டுள்ளார். அதில், மகிந்த ராஜபக்சே இடம்பெற மாட்டார். புதிய அமைச்சரவையில் 20 பேர் இடம்பெறுவார்கள். அனைத்து அரசியல் கட்சிகள் அடங்கிய உள்ளடக்கிய தேசிய கவுன்சில் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு முக்கிய முடிவுகள் எடுக்கும் என சிறிசேன கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.