உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் மிதந்த 3 உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் 5 வயது சிறுமி உட்பட 3 பெண் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அணையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆகியோரின் உடல்கள் மிதப்பதாக தளி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் உடல்களை மீட்ட போலீசார், கொலையா, தற்கொலையா, மூவரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.