ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய துருப்புகள்


உக்ரைன் மீதான ரஷ்ய போர் நீடித்து வரும் நிலையில், இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக சுமார் 8,000 பிரித்தானிய வீரர்கள் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட உள்ளனர்.

பிரித்தானிய வீரர்களுடன் இராணுவ டாங்கிகளும் நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய வாகனங்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.
பிரித்தானிய வீரர்களுடன், நேட்டோ துருப்புகளும், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நோர்வே படைகளும் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையானது ஒற்றுமை மற்றும் வலிமையை வெளிப்படுத்தும் என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் பாதுகாப்பு என்பது எப்போதும் முக்கியமானதாக இருந்ததில்லை.

இந்தப் பயிற்சிகள், பனிப்போருக்குப் பிந்தைய மிகப் பெரிய முயற்சிகளில் ஒன்று எனவும்,
நேட்டோ மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 8,000 இராணுவ வீரர்கள் குறித்த பயிற்சியில் களமிறங்க உள்ளதாகவும், பல்வேறு கட்ட பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, போலந்தில் அமெரிக்க துருப்புகளுடனும் பிரித்தானிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.