கேரளாவில் சுற்றுலா சென்ற இளைஞர்களின் பைக் மீது பாறை உருண்டு வந்து அடித்து செல்லும் வீடியோ காட்சி.!

கேரள மாநிலம் தாமரசேரி அருகே மலையின் மீது இருந்து உருண்டு வந்த பாறை பைக் மீது விழுந்ததில், ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், கடந்த 16ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து வயநாடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, மலைபாதை வழியாக பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மலை மீது இருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து பைக் மீது விழுந்ததில் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற மலப்புரம் பகுதியை சேர்ந்த அபிநவ் என்ற இளைஞர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். பைக்கை ஓட்டி சென்ற நபர் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.