சந்தோஷத்திற்காக ஐஸ்வர்யா செய்யும் காரியம்: வாழ்த்தும் ரசிகர்கள்..!

தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெறும் ஐஸ்வர்யா, தற்போது தனது
இன்ஸ்டாகிராம்
ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் படு வேகமாக வைரலானது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன்னுடைய கெரியர் சமப்ந்தமான வேளைகளில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் தனது ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார் ஐஸ்வர்யா.

மரண பயம் தெரியுதே: அஜித் ரசிகர்களை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!

மேலும், தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி என பிசியாக உள்ளார். ஐஸ்வர்யா தற்போது எந்த பதிவுகள் பகிர்ந்தாலும் அதனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Aishwarya Rajinikanth

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அதிகாலையிலே சைக்களிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பியூட்டி புல் மெட்ராஸ், மெட்ராஸ் லவ் என பல கேப்சன்கள் கொடுத்து ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விமர்சனங்களை எல்லாம் காதில் வாங்காமல் சந்தோஷத்திற்காக ஐஸ்வர்யா செய்யும் காரியங்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.