ட்விட்டரில் கெஞ்சிய தனுஷ் பட இயக்குனர்..!இவருக்கே இந்த நிலைமையா ?

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக வெற்றிகண்டவர்களுள் ஒருவர்
கார்த்திக் நரேன்
.
துருவங்கள் பதினாறு
என்ற படத்தின் மூலம் இயக்குனரானார் கார்த்திக் நரேன். தன் முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். திரில்லர் படமாக வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் அமோகமான வெற்றியை பெற்றது.

அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய
நரகாசுரன்
படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அதை அப்படியே விட்டுவிட்டு கார்த்திக் நரேன் அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து மாபியா படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நடிகர் விஜயகாந்தின் உருக்கமான பதிவு…கண்கலங்கும் ரசிகர்கள்..!

அதைத்தொடர்ந்து நவரசா எனும் வெப் தொடரில் ஒரு பாகத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். இந்நிலையில் நடிகர் தனுஷை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் நரேனுக்கு கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்பில்
தனுஷ்
மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவான
மாறன்
திரைப்படம் கடந்த மாதம் OTT யில் வெளியானது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் நிறங்கள் மூன்று என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் தளத்தை வாங்கியிருக்கும் எலான் மஸ்கிடம் கார்த்திக் நரேன் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் பதிவிட்டது என்னெவென்றால், யோவ் எலான் மஸ்க் எப்படியாவது அந்த நரகாசுரன் படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுயா. உனக்கு புண்ணியமா போகும் என பதிவிட்டிருந்தார். இப்படம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நிதி நெருக்கடி காரணமாக வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கன் vs சுதீப் – ‘இந்தி’ குறித்து ட்விட்டரில் அனல் பறந்த விவாத போர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.