வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என கணித்துள்ள அம்மையம், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாக இருக்கும் என தெரிவித்துள்ளது.