தருமபுரி: தருமபுரி மாவட்டம் கமலநத்தம் கிராமம் அருகே போதை ஊசி பயன்படுத்தியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். போதை ஊசி பயன்படுத்திய முருகேசன், வஜ்ஜிரவேல் ஆகிய இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இருவரின் வீடுகளில் இருந்தும் கடந்த மாதம் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.