நயன்தாரா உண்மையானவர்… ரொம்பவே விசுவாசமானவர்… புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம்
காத்து வாக்குல ரெண்டு காதல்
. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,
நயன்தாரா
ஆகியோருடன் நடிகை சமந்தாவும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்.

இதில் சமந்தாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது. படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள
சமந்தா
அவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

திருமணமான தயாரிப்பாளருடன் தனிக்குடித்தனம் நடத்தும் சமந்தா? தீயாய் பரவும் தகவல்!

அதாவது நயன்தாரா நயன்தாராதான்… அவரைப்போல் யாரும் இல்லை. அவர் உண்மையானவர். அவர் மிகவும் விசுவாசமானவர். நான் சந்தித்த கடின உழைப்பாளிகளில் நயன்தாராவும் ஒருவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

அடக்கடவுளே… குழந்தை பெத்துக்கிட்டது ஒரு குத்தம்மா? வேதனையில் நடிகை!

பெரும்பாலும் நடிகைகள் சக நடிகைகளுடன் போட்டி மனப்பான்மையுடனே இருப்பார்கள். பெரிதாக நல்ல நட்பை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் நயன்தாரா குறித்து சமந்தா இப்படி வெளிப்படையாக பேசியிருப்பது அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருப்பதை காட்டுகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின் போதே இருவரும் கட்டியணைத்தப்படியும் நெருக்கமாகவும் இருக்கும் போட்டோக்கள் வெளியானது. படத்திலும் சமந்தாவுக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.