ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினால் தான் என்னை நானே தேற்றிக் கொள்ளமுடியும் என்றும், இந்த தேர் விபத்தில் அரசியல் பார்க்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேரவையில் உருக்கமாக தெரிவித்தார்.
பல பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்று பல மாலைகளை மாணவர்களுக்கு சூட்டியுள்ளேன், ஆனால் நேற்று, தான் பிணவறையில் வைத்த முதல் மாலை 8ஆம் வகுப்பு மாணவனின் சடலத்துக்கு என உருக்கத்துடன் அவர் தெரிவித்தார்.