பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்  இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது நேரத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நிறுத்தப்பட்ட இடங்களில் மீண்டும் போக்குவரத்து தொடங்க வேண்டும், பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய  அமைச்சர் சிவசங்கர் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மின் பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து தீர்வு காணப்படும் என்றும் கூறியதுடன்  கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலினை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பள்ளி நேரங்களில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.