பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் லாரன்ஸ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.