பள்ளி வளாகத்தில் 7ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பள்ளி வளாகத்தில் 7ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கலூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகள் நிதர்சனா, அங்குள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற நிதர்சனா, வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் மாணவியை அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கிருந்து அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி மூச்சுத்திணறல், ரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே மாணவியின் இறப்பிற்கான காரணம் தெரிய வருமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.