பிரம்மாண்டத்தை இணைந்து பார்த்த ஜாம்பவான்கள்: வைரலாகும் போட்டோஸ்..!

இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பி இருந்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி வெளியான இந்தப்படம் இந்திய திரையுலகையே கலக்கி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இந்தப்படத்தை தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் இருவரும் இணைந்து பார்த்துள்ளனர்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ’கேஜிஎஃப்’. இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டே உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருந்தது. நடிகர் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 900 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது இந்தப்படம். இதனை தொடர்ந்து ’கேஜிஎஃப்’ படத்தின் மூன்றாவது பாகமும் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘விக்ரம்’ படத்திற்காக படக்குழு செய்த மாஸ் சம்பவம்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆண்டவர்.!

பிரம்மாண்ட வெற்றியை குவித்துள்ள இந்தப்படத்தை ஏற்கனவே பல திரையுலகினர் பார்த்து பாராட்டிய நிலையில் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான உலக நாயகன்
கமல்ஹாசன்
மற்றும் இசைஞானி
இளையராஜா
ஆகிய இருவரும் இணைந்து பார்த்துள்ளனர். இருவரையும் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ’
கேஜிஎஃப் 2
‘ பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.