புதுச்சேரியில் அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும்: கவர்னர் தமிழிசை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

latest tamil news

பாவேந்தர் பாரதிதாசனின் 132வது பிறந்தநாளையோட்டி புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு அருகே அமைந்துள்ள பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

latest tamil news

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கவர்னர் தமிழிசை, ‘ தமிழ்த் தெருவில் தமிழ் தான் இல்லை என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது விருப்பத்திற்கு இணங்க புதுச்சேரியில் உள்ள அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் வைக்கப்பட வேண்டும்’ இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.