பொறியியல் சார்நிலை பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.!

பொறியியல் சார்நிலை பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் சார்நிலை பணிகளுக்கான போட்டி தேர்வு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான மதிப்பெண் விபரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

மீன்வளத்துறை இளநிலை பொறியாளர், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

நெடுஞ்சாலை துறையில், இளநிலை வரைவாளர் பணிக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், மே 12, 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. பொது பணித்துறையில், இளநிலை வரைவாளர் பணி தேர்வுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், மே 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி. யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.