போருக்கு பின் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 2 மடங்கு அதிகரிப்பு

உக்ரைன் மீது படையெடுத்த 2 மாதங்களில், 2021ம் ஆண்டு முழுவதும் வாங்கியதை விட இரு மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது.

கடந்த இரு மாதங்களில் மட்டும் ரஷ்யாவிடம் 4 கோடி பேரல்கள் கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முழுவதும் ரஷ்யாவிடம் இருந்து ஒரு கோடியே 60 லட்சம் பேரல்கள் மட்டுமே இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளன.

மேற்கு நாடுகளின் தடையை தொடர்ந்து ரஷ்யா வழங்கும் தள்ளுபடி விலையிலான கச்சா எண்ணெயை ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி, ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் அதிகளவில் வாங்குகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.