மகிந்தவை பதவி விலகுமாறு கோட்டாபய கூறுவார்! அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியான தகவல்



பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரவுள்ளார் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.  

 புதிய பிரதமருக்கு வழிவிடுவதற்காக மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுப்பார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலகியபின்னர் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஏற்கனவே ஆளும்கட்சியின் அதிருப்தியாளர்களிற்கு தெரிவித்துள்ளார்.

நான் பதவி விலகமாட்டேன் என்னை விரும்பினால் பதவி நீக்கம் செய்யலாம் என பிரதமர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வாரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

பிரதமரை பதவியிலிருந்து அகற்றாவிட்டால் அது நாட்டில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.