மரண பயம் தெரியுதே: அஜித் ரசிகர்களை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!

நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும்
விக்னேஷ் சிவன்
இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு ‘
காத்து வாக்குல ரெண்டு காதல்
‘ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் இந்தப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் நேற்று வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் குறித்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. படம் செம்ம ஜாலியாக கலர்புல்லாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வந்தாலும், படம் ஸ்லோவாக செல்வதாகவும், திரைக்கதை அந்தளவிற்கு சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

பிரம்மாண்டத்தை இணைந்து பார்த்த ஜாம்பவான்கள்: வைரலாகும் போட்டோஸ்..!

இந்நிலையில் எல்லா படங்களையும் வச்சு செய்யும் ப்ளு சட்டை மாறன் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் கண்டமேனிக்கு விளாசியுள்ளார். கடைசில தமிழ் சினிமாவை அனிருத் தான் காப்பாத்தணும் போல இருக்கு என விமர்சித்துள்ளார். மேலும் சுமாரா இருந்தா ‘டாக்டர்’ படம் பார்த்த விஜய் ரசிகர்கள் முகத்துலயே மரண பயம் தெரிந்துச்சு. இப்போ இந்தப்படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் என்ன பண்ண போறாங்களோ என தன் பாணியில் அஜித் ரசிகர்களையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘
ஏகே 62
’ படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“காத்து வாக்குல ரெண்டு காதல்” கொண்டாட்டம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.