மூன்றாவது வாரத்திலும் 350 தியேட்டர்களில் 'கேஜிஎப் 2'

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. மிகப் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற இன்று இப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.

தமிழகத்தில் 350க்கும் கூடுதலான தியேட்டர்களில் இன்னமும் தொடர்ந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ராக்கி பாயின் ஓட்டத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி என படத்தைத் தமிழகத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் 350 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறதாம். கர்நாடகாவில் 150 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 125 கோடி, பிற மாநிலங்களில் 60 கோடி, கேரளாவில் 50 கோடி, வெளிநாடுகளில் 160 கோடி என 970 கோடி ரூபாய் வசூலை மொத்தமாகப் பெற்றுள்ளது. இன்றைய வசூலுக்குப் பிறகு 1000 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.