மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடா நாட்டவர் உயிரிழப்பு.. விமானம் மூலம் உடல் கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழர், சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் கனடா எடுத்துச் சென்றனர்.

கடந்த 13ஆம் தேதி மேல்மருவத்தூருக்கு தாய் லீலாவதி மற்றும் சகோதிரியுடன் வந்த மகிந்தன் திடீரென காணாமல் போன நிலையில், ஆத்தூர் சாலையோரத்தில் மயங்கிக் கிடந்ததாக சிலர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி மகிந்தன் உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்து உறவினர்கள் அவரது உடலை மீட்டு கனடா கொண்டு சென்றனர். இந்நிலையில் ஆத்தூர் வரை மகிந்தன் எதற்காக சென்றார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.