ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் – ஒருவர் கைது

டெல்லி ஷாகீன் பாக்கில் வீட்டில் சாக்கு பைகளில் கட்டி வைத்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயினை கைப்பற்றிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஒருவரை கைது செய்தனர்.

அதே பகுதியில் ஒரு மரத்தின் கீழ் இருந்த 30 லட்ச ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 47 கிலோ மதிப்பிலான போதைப் பொருள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமா அல்லது சட்ட விரோத செயல்களுக்காக பாகிஸ்தான் அல்லது ஆப்கானில் இருந்து கடத்தி வரப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் வீடு வாடகைக்கு எடுத்து ஹெராயினை கடத்த இருந்த நிலையில் பிடிபட்டுள்ளார். மரத்தடியில் கைப்பற்றப்பட்ட 47 கிலோ மர்ம பொருளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பிய நிலையில், டெல்லியில் மிகப் பெரிய போதைப் பொருள் பறிமுதல் எனக் கூறினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.