டெல்லி : 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து விவாதிக்க தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழு கூட்டம் இன்று கூடுகிறது. தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.