என்ன சுகம்… என்ன்ன சுகம்… உன்னிடம் நான் கண்ட சுகம்…: பெண்களின் மசாஜில் மெய் மறந்த இன்ஸ்பெக்டர்

பாட்னா: பீகார் மாநிலம், சகர்சா மாவட்டம், தர்ஹட்டா காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சசிபூஷன் சின்கா. 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஜாமீன் பெறுவதற்காக, குற்றவாளியின் உறவினர்களாக 2 பெண்கள் சின்காவை தொடர்பு கொண்டனர். காவல் நிலையத்துக்கு வந்த அவர்களிடம் வெறும் உடம்புடன் இருந்த சின்கா மசாஜ் செய்து விடும்படி கூறியுள்ளார். ஒரு பெண் அவருக்கு பக்கத்தில் உரசியபடி அமர்ந்திருக்க, மற்றொரு பெண் அவருடைய தலை, மார்பு பகுதிகளை மசாஜ் செய்து விடுகிறார். அப்போது, அவர் மெய் மறந்த நிலையில் யாரோ ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு,  ‘சார்… கொஞ்சம் பணத்துடன் 2 பெண்களை உங்களிடம் அனுப்புகிறேன்.அவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நான் கூட அவர்களுக்கு என் பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுத்து கொடுத்து உதவி செய்திருக்கிறேன்…’ என பேசுகிறார்.இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகர்சா மாவட்ட எஸ்பி லிபி சிங், சின்காவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.