#சற்றுமுன் || திருவண்ணாமலை அருகே கோர விபத்து.! பலியான உயிர்கள்., சிகிச்சையில் 20 பேர்.!

திருவண்ணாமலை அருகே நடந்த வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை – செங்கம் அருகே டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

காவேரிப்பட்டணத்தில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சென்ற டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சற்றுமுன் நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.