தொப்பி போட்டு பைக் ரைடு…தொழுது விட்டு வந்த சிறுவனின் ஆசையயை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளர்.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் ஆசையை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் நிறைவேற்றியுள்ளார்.

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காவல் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக முஜக்கீர் என்பவர் ரம்ஜான் சிறப்பு தொழுகை முடித்து விட்டு தன்னுடைய 4 வயது மகன் முபஷீர் உடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் சென்ற சிறுவன் முபஷீர், போலீஸ் தொப்பி அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என கூறியதையடுத்து, தனது தொப்பியை சிறுவனுக்கு அணிவித்த அவர், பைக்கிலும் அழைத்து சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.