மே தினத்தை முன்னிட்டு நாளை முதல் வரும் 2ம் தேதி வரை மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த செயல்படும் பார்கள் மற்றும் மதுபான விற்பனை உரிமை பெற்ற தனியார் ஓட்டல்கள் அனைத்தும் 3.4.2022 இரவு 10 மணி முதல் 2.5.2022 காலை 12 மணி வரை மூடி வைக்கவேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.5.2002 அன்று மே தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது பார்கள் மற்றும் மதுபான விற்பனை உரிமை பெற்ற தனியார் ஓட்டல்கள் அனைத்தும் 3.4.2022 இரவு 10 மணி முதல் 2.5.2022 காலை 12 மணிவரை மூட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறி யாரேனும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.