பாகிஸ்தானில் கடும் வெப்பத்திற்கு மத்தியில் மின் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் 18 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நிலக்கரி, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, தேவை மற்றும் சப்ளையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலால் அனல் மின் நிலையங்களில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடை பட்டுள்ளது.
இதனால் நகர்ப்புறங்களில் 6 முதல் 10 மணி நேரம் மின் தடையும், கிராம புறங்களில் 18 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் மின் தடையால் தொழில், வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.