போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை| Dinamalar

லண்டன்: போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெர்மனி முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், 54 முன்னாள் நம்பர் -1 வீரர், கிராண்டஸ்லாம், அரங்கில் 6 கோப்பை வென்றவர் 2002-ல் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய இருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இது நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது லண்டனில் வசிக்கிறார். பெக்கர் 2017-ல் தான் திவால் ஆனதாக அறிவித்தார். இவர் தனது சொத்துக்களை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடந்தது.

நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்க்டது. நான்கு பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திவால் வழக்கு என்பதால் தண்டனை காலத்தில் பாதி நாட்கள் மட்டும் பெக்கர் சிறையில் இருக்க நேரிடும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.