ரஷ்யாவின் 40 விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் புகழ்பெற்ற விமானி போரில் வீரமரணம்

ரஷ்யாவின் நாற்பது விமானங்களைச் சுட்டு வீழ்த்திய உக்ரைனின் சிறந்த விமானியான ஸ்டீபன் தாராபல்கா போரில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

29 வயதே ஆன விமானி தாராபல்கா ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே அந்நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்திப் புகழ்பெற்றார். ஐந்துக்கு மேற்பட்ட விமானங்களை வீழ்த்தியதற்காகச் சிறந்த விமானி என்கிற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் பெற்றார்.

மார்ச் 13ஆம் நாள் அவர் போரில் உயிரிழக்கும் வரை ரஷ்யாவின் 40 விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக தி டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த வீரதீரச் செயலுக்காக ஆர்டர் ஆப்த கோல்டன் ஸ்டார், உக்ரைனின் நாயகன் ஆகிய விருதுகள் இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைனிய அரசோ, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகமோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.