அமெரிக்காவில் உணவு திருவிழாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 5 பேர் காயம்

மிஸ்ஸிஸிப்பி,
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி நகரில் ஆண்டுதோறும் மட்பக்ஸ் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டும் இதேபோன்று திருவிழா களை கட்டியது.  இந்த திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில் விழாவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.  5 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி நகர ஷெரிப் டைரீ ஜோன்ஸ் கூறும்போது, படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.  மிஸ்ஸிஸிப்பி புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டு உள்ளது என கூறிய அவர் வேறு விவரங்களை தெரிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.