இந்தியாவுக்கே யோகா சொந்தம்: ஆர்.எஸ்.எஸ்.,| Dinamalar

சஹரன்பூர் : ”யோகாவுக்கு சில நாடுகள் காப்புரிமை பெற விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கே யோகா சொந்தமானது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

யோகா கலை, இப்போது சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. அதனால் யோகாவுக்கு காப்புரிமை பெற சில நாடுகள் விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கே யோகா சொந்தமானது; அதில் நாம் உறுதியாக இருக்க வேணடும். மற்ற நாடுகளில் உடல் ரீதியான அறிவு மட்டுமே உள்ளது. ஆனால் பாரதத்தில் மட்டுமே ஆன்மிக அறிவு உள்ளது. அதை கற்றுக்கொள்ள இந்தியாவை நோக்கி வெளிநாட்டினர் வருகின்றனர்.யோகா பயிற்சியால் அறிவின் உச்ச நிலையை அடையலாம். யோகா பயிற்சியால் தான் நம் ரிஷிகள் அறிவில் சிறந்து விளங்கினர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.