இலங்கை நாட்டு மக்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்சே

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பிரதமரை பதவி விலகும்படி அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,  நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாவது:-

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் அயராது உழைக்கும் மக்களுக்கு மே தின வாழ்த்துகள். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்- மும்பை பங்கு சந்தை தலைவர் கருத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.