சென்னை: சென்னையில் கல்வி சமூகநீதி கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். எளிய மக்களின் கல்விக்காக நான் குரல் கொடுப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் தொடர்ந்து எடுத்து வருகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.