கோயில் திருவிழா முன் விரோதம்: மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் அருகே உள்ள TMC காலணி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்குமிடையே ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் நடக்கும் திருவிழாவின்போது சிறு சிறு மோதல் ஏற்படுவது வழக்கம்.
image
இந்நிலையில் நேற்று கலைஞர் நகரில் நடைபெற்ற திருவிழாவின்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு TMC காலனியைச் சேர்ந்த சிலர், கலைஞர் நகரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் முகிலன் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
image
இந்த தாக்குதலில் முகிலனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே முகிலனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், முகிலனை பின்தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத சிலர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் முகிலனை ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
image
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகர போலீசார், விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.