புதுடில்லி: கடந்த ஏப்., மாதம் ஜி.எஸ்.டி., வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இதற்கு முன்னர் மார்ச் மாதம் வசூலான 1.42 லட்சம் கோடி தான் அதிகமாக இருந்தது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்., மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,67,540 கோடியில் சிஜிஎஸ்டி – ரூ.33,159 கோடி எஸ்ஜிஎஸ்டி- ரூ.41,793 கோடி ஐஜிஎஸ்டி- ரூ.81,939 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.36,705 கோடி உட்பட) செஸ்-ரூ.10,649 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.857 கோடி உட்பட) அடங்கும்.
இந்த வசூலானது, கடந்த ஆண்டு(2021) ஏப்., மாதம் வசூலான 1.42 லட்சம் கோடியை காட்டிலும் ரூ.25 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: கடந்த ஏப்., மாதம் ஜி.எஸ்.டி., வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.