வெப்பநிலை அதிகரிப்பு:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளது.

latest tamil news

நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதை அடுத்து மின் தடை மின்வெடட்டு உள்ளிட்டவை ஏற்படாதவாறு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளுக்கான மின் விநியோகத்தில் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் சரும நோய்களுக்கு தடையற்ற சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

latest tamil news

கோடை வெப்பத்தின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.