அதிவேகமாக பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு இளைஞர் மரணம்- பதறவைக்கும் சிசிடிவி காட்சி

புனலூர்:
கொல்லம் புனலூரில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம்  திருவனந்தபுரம் நெடும்பாறையைச் சேர்ந்த சஜீவன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் கொல்லம் சென்றுவிட்டு திரும்பியுள்ளார். 
அப்போது புனலூரில் உள்ள வளைவில், அதிவேகமாக திரும்பிய அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து சறுக்கியது. அப்போது சஜீவனின் தலை சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.