இலங்கை மக்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி அளித்ததற்காக, அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் நன்றி

லங்கை மக்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி அளித்ததற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்கக் கோரி கடந்த வாரம் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதுடன், அது குறித்து பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் என குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.